.

Pages

Saturday, April 4, 2020

கரோனா சமூகப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உதவி வரும் PFI செயல்வீரர்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.04
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், கரோனா நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அதிராம்பட்டினத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தகவல் சேகரிக்க  சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வீட வீடாக சென்று தீவிர கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா சமூகப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உதவியாக சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பகுதி செயலாளர் அகமது ரிழா தலைமையில், அவ்வமைப்பின் செயல்வீரர்கள் கடந்த 2 தினங்களாக தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். மேலும், கரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.