பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி கேட்ட கேள்விக்கு வெளியுறத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதிக்குப் பின் செல்லாது என்று சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. நவம்பர் 25-ந்தேதி முதல் வெளிநாடுகள், இதுபோன்ற பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களை தடுத்து நிறுத்தலாம்.
கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பிறகு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாஸ்போர்ட் (மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) வழங்கப்பட்டு வருகிறது. 1990-ம் ஆண்டுகளில் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதன் 20 வருட செல்லுபடியாகும் காலம் முடிந்துவிட்டது. இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகன்கள் தங்கள் 20 வருடத்திற்கு முன்பு உள்ள பழைய பாஸ்போர்ட்டுகளை நவம்பர் 24-ந்தேதிக்குள் மாற்றி வெளிநாடுகளுக்கு சிரமமின்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: மாலை மலர்

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ச........மா செல்லாது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com