.

Pages

Thursday, December 18, 2014

இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவனுக்கு லண்டன் வாழ் அதிரையர் வழங்கிய ₹ 57,000/- ம் TNTJ நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு !

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தை சார்ந்த கூலித்தொழிலாளி செய்யது என்பவரின் மகன் வஸிம் அஹ்மது ( வயது 5 ) என்ற சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் அவதியுற்று வருகின்றான் என்றும், இச்சிறுவனின் மருத்துவ செலவு வகைக்கு  ₹ 6 இலட்சம் வரை தேவைப்படுவதாக கூறி கடந்த [ 19-11-2014 ] அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் கிளையின் சார்பில் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை பார்வையிட்ட நமதூர் சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்றி செய்துவரும் லண்டன்வாழ் அதிரையர் எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது அவர்கள் மூலம் திரட்டப்பட்ட 57,000/- த்தை, 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர் இத்ரீஸ் ஆகியோர் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை செயலாளர் எஸ்.பி பக்கீர் மற்றும் ஏனைய தவ்ஹீத் ஜமாத் ஆதரவாளர்கள் முன்னிலையில் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிதியை பெற்றுக்கொண்ட கிளை நிர்வாகிகள், வழங்கியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு, துவாவும் செய்தனர். இவற்றை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் கிளை மூலமாக விரைவில் உரியவரிடம் கொண்டு சேர்ப்பதாக கூறினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.