.

Pages

Sunday, December 14, 2014

அதிரையில் நாளை முதல் ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி தொடக்கம்!

ரேஷன் கார்டில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி நாளை மறுதினம் முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்குகிறது. உள்தாள் ஒட்ட முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அதிக கூட்டம் இருக்கும். அதனால், முதல் ஒரு சில நாட்கள் காலை முதல் மாலை வரை ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி மட்டுமே நடைபெறும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 17ம் தேதிக்கு பிறகு, காலையில் ரேஷன் பொருட்களும், மாலையில் உள்தாள் ஒட்டும் பணியிலும் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

குடும்பத் தலைவரோ அல்லது குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்களோ உள்தாள் ஒட்டுவதற்காக கடைகளுக்குச் செல்லலாம். குடும்பத் தலைவரைத் தவிர்த்து வேறு யாரேனும் செல்ல விரும்பினால், அவர்களுக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு உள்தாள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உள்தாள்கள் ஒட்டப்படும் நாள்களிலும் உணவுப் பொருள்களை வழங்க, கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. தபால் நிலையங்களில் ஓட்ற (நாக்கை தடவி ) வேலை இருந்தது அது காலப் போக்கில் மாறிப் போய்விட்டது இப்போ என்னன்னா அந்த வேலை இப்போ இங்கேயா? சீக்கிரமா ஏலேக்ட்ரோனிக் கார்டு கொடுங்க சார்!! இதுல வேற 2020
    ல் வல்லரசு ஆகன்னும்னு ஆசை!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.