.

Pages

Monday, December 1, 2014

செடியன் குளம் வடிகால் உடைந்து பிலால்நகர் குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது ! [ படங்கள் இணைப்பு ]

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட செடியன் குளம் கடந்த சில வாரங்களாக அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், கடந்த வாரம் சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக வந்த ஆற்று நீராலும் நிரம்பி, ஏரி போல் காட்சியளித்தது. இதனால் அதிரையர்கள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குளத்தில் தினமும் ஏராளமானோர் குளித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக செடியன் குளத்தில் காணப்படும் வடிகாலின் ஒரு பகுதி உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள தாழ்வான பகுதியாகிய பிலால் நகர் குடியிருப்பு, பிராதான சாலைகளில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு செல்வோரும், வாக்கிங் செல்வோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் செடியன் குளத்தின் தண்ணீர் பிலால் நகர் பகுதியில் ஆங்காங்கே தேங்கி காணப்படுவதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர் அப்பகுதியின் ஆர்வலர்கள்.

பல்வேறு தரப்பின் கடின முயற்சியின் கீழ் கொண்டு வந்த தண்ணீர் வீணாக வெளியேறி வருவது மிகுந்த கவலை அளிப்பதாக கூறுகின்றனர். குளத்திலிருந்து இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வந்தால் குளம் காலியாகிவிடும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.