நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஜலால் தலைமையுரை ஆற்றினார். முன்னிலை வகித்த கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.
சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வழிகாட்டுதல் படி, ராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஆர் குமாரி, டி. ஸ்ரீநாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் வ. விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் எஸ். சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெங்கு உற்பத்தி குறித்தும், இவற்றை தடுப்பதும் குறித்தும் 'டெங்கு ஒழிப்பு வழிமுறைகள்' குறித்து குறும்படம் மூலம் விளக்கமளித்தனர்.
முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் வரவேற்புரை ஆற்றினார். இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் ஓ. சாதிக், பேராசிரியர் பிரேம் நவாஸ், பேராசிரியை சாபீரா பேகம் உள்ளிட்ட கல்லூரியின் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வாழ்த்துகள் பாராட்டுகள்
ReplyDeleteடெங்கு காய்ச்சல் தேங்கி நிற்கும் நீரிலிருந்து பெண் கொசுக்களால் பரப்படும் ஒரு வகையான வைரஸ். காய்ச்சல் தொடர்ந்து 3-7 நாள் இருந்தாலும், தலைவலி, மூட்டு வலி, வாந்தி, ஸ்கின் ரஷ், மூக்கிலிருந்து தண்ணீர் வருதல் இருந்தால் டெங்கு காய்ச்சல் வந்ததற்கான அறிகுறி. ராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதற்க்கான வைத்தியம் சிறந்தது என சொன்னார்கள்.
ReplyDeleteமழைக்காலங்களில் தண்ணீரை சுட வைத்து அருந்துவது நல்லது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு நன்றி.