.

Pages

Wednesday, December 17, 2014

காதிர் முகைதீன் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பொது சுகாதார துறை ஆகியோர் இணைந்து டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று காலை கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஜலால் தலைமையுரை ஆற்றினார். முன்னிலை வகித்த கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வழிகாட்டுதல் படி, ராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஆர் குமாரி, டி. ஸ்ரீநாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் வ. விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் எஸ். சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெங்கு உற்பத்தி குறித்தும், இவற்றை தடுப்பதும் குறித்தும் 'டெங்கு ஒழிப்பு வழிமுறைகள்' குறித்து குறும்படம் மூலம் விளக்கமளித்தனர்.

முன்னதாக  நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் வரவேற்புரை ஆற்றினார். இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் ஓ. சாதிக், பேராசிரியர் பிரேம் நவாஸ், பேராசிரியை சாபீரா பேகம் உள்ளிட்ட கல்லூரியின் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. வாழ்த்துகள் பாராட்டுகள்

    ReplyDelete
  2. டெங்கு காய்ச்சல் தேங்கி நிற்கும் நீரிலிருந்து பெண் கொசுக்களால் பரப்படும் ஒரு வகையான வைரஸ். காய்ச்சல் தொடர்ந்து 3-7 நாள் இருந்தாலும், தலைவலி, மூட்டு வலி, வாந்தி, ஸ்கின் ரஷ், மூக்கிலிருந்து தண்ணீர் வருதல் இருந்தால் டெங்கு காய்ச்சல் வந்ததற்கான அறிகுறி. ராஜாமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதற்க்கான வைத்தியம் சிறந்தது என சொன்னார்கள்.

    மழைக்காலங்களில் தண்ணீரை சுட வைத்து அருந்துவது நல்லது. விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.