.

Pages

Monday, December 1, 2014

அதிரை அருகே இடி தாக்கியதில் மாடு பலி - படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி !

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் அதிரை அருகே உள்ள ஆண்டிக்காடு கிராமத்தில் சோமாஸ் என்பவருக்கு சொந்தமான மாட்டின் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. முன்னதாக மாட்டின் அலறல் சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த பார்த்த சோமாஸ் மனைவி அந்தோணி மேரி ( வயது 45 ) இடி தாக்கியதில் படுகாயமடைந்தார். உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இடி தாக்கியதில் வீட்டில் இருந்த எலெக்ட்ரானிக் சாதனங்களும் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இடிதாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' சிவா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.