.

Pages

Monday, February 2, 2015

போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 50 பேர் மீது போலீசார் வழக்கு !

முத்துப்பேட்டையில் காந்தி நினைவு நாளான 30-ம் தேதி சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சி சார்பில் காந்தியைச் சுற்றுக் கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க எதிர்ப்பு தொவித்து ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த 15 தினங்களுக்கு முன்பு முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. முதலில் அனுமதி வழங்கிய போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த 29-ம் தேதி தடை விதித்து நிர்வாகி வீட்டில் நோட்டிஸ் ஒட்டியது. இதனால் கட்சியினர் மத்தியில அதிர்ப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் 30-ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த பேரூராட்சி அலுவலகம் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது திடீர் என்று அங்கே வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினா.; பின்னர் திடீரென்று கட்சியினர் கோட்சேவின் உருவப்படத்தை தீயிட்டு கொழுத்தி கோட்சேவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது தலைமையில் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை 
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.