.

Pages

Monday, February 2, 2015

கியாஸ் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கட்டாய வசூல்: புகார் தெரிவிக்க அறிவுறுத்தல் !

சென்னை: சமையல் கியாஸ் நேரடி மானியம் திட்டம் ஜனவரி 1ம் தேதி முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் முழு தொகை கொடுத்து சிலிண்டரை பெற வேண்டும். மானியம் பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக இணைப்புகள் வைத்து சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  ஆனாலும் கியாஸ் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் போது முன்பெல்லாம் ரூ.10, 20 கொடுத்தால் வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது தரை தளத்தில் உள்ள வீடுகளாக இருந்தால் ரூ.30ம் அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தால் ரூ. 50ம் கட்டாயம் தர வேண்டும் என்று ஊழியர்கள் பிடிவாதம் செய்கின்றனர். சென்னையைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான பேர் வாடகை வீடுகளிலும், அடுக்குமாடிகளிலும் குடியிருக்கிறார்கள். அவர்களிடம் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். இல்லையென்றால் வாக்குவாதம் செய்து விட்டு மீண்டும் சிலிண்டரை திரும்ப பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கூறுகையில்:
கியாஸ் விநியோகம் செய்யும் நபர்களுக்கு பணம் எதுவும் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு விநியோகஸ்தர்கள் சம்பளம் வழங்குகிறார்கள். வாடிக்கையாளர்களே முன்வந்து கொடுப்பது அவர்களது விருப்பம். ஆனால் ரூ.30, 40, 50 என நிர்ணயம் செய்து கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவது தவறு. அதனை அனுமதிக்க கூடாது. கட்டாயப்படுத்தி பணம் கேட்டால் போன் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம். மேலும் தேனாம்பேட்டையில் இதற்காக சேவை மையம் செயல்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும நேரத்தில் பொது மக்கள் நேரிலும் வந்து எழுத்து மூலம் புகார் கொடுக்கலாம். இது தவிர 11800 425247247 என்ற இலவச டெலிபோன் மூலமாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம்' என்று கூறியுள்ளார்.

நன்றி:தினகரன்

3 comments:

  1. cylinder விலையை ஏற்றினால் சாப்பாடு கடையில் உணவுகளின் விலை ஏறுகிறது. ஆனால் cylinder விலை குறைந்தால் சாப்பாடு கடையில் உணவுகளின் விலை குறைய வில்லை. இங்கு நியூட்டன் 3 றாவது விதி செயல் பட விட மாட்டேன் என்று சொல்கிறார்கள் கடை முதலாளிகள். இதெல்லாம் கொடுமை சாரு!

    50 ரூபாய் கேட்கிறார்கள் என்று புகார் பண்ண டயல் பண்ணினால் யாரும் எடுக்க மாட்டாங்க எப்பவும் பிஸி டோன் கேட்க்கும் ஏன்னா இவங்களுக்கு தெரியும்.இதற்க்கு பெயர் தான் கூட்டு கொள்ளை.

    ReplyDelete
  2. உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா?
    காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள்.
    பிறகு வாங்குங்கள்.
    ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
    படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.
    இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.
    A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.
    A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
    B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
    C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
    D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
    உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"
    அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. GAS PROBLEM CALL :044-28592828 OR 18002333555

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.