.

Pages

Friday, December 15, 2017

ஆஸ்பத்திரிதெரு சாலைப் பணி மீண்டும் தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிக வர்த்தகக் கடைகள் நிறைந்த பகுதியாகக் கருதப்படுகிற ஆஸ்பத்திரி தெரு சாலை, கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளித்தது.  இதனால், தினமும் இச்சாலை வழியே கடந்து செல்லும் பள்ளி வாகனங்கள் முதல் பொதுமக்கள் வரை மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஆஸ்பத்திரி தெரு சாலையின் (திலகர் தெரு) ஈஸ்ட் கோஸ்ட் சாலை இணைப்பு முதல், சேர்மன் வாடி சாலை வரையிலான பகுதியில், பேரூராட்சி பொதுநிதி ரூ. 17.50 லட்சம் மதிப்பீட்டில், 660 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி கடந்த நவ.15 ந் தேதி தொடங்கியது.

இப்பணிக்காக, சாலையோரத்தில் ஜல்லிக்கல் ஆங்காங்கே குவித்து வைத்துள்ளதால், இந்த வழியே கடந்த செல்லும் பள்ளி வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகின்றன இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் கலக்கமடைந்தனர். எனவே, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் தார் சாலை அமைக்கும் பணியை தாமதமில்லாமல் விரைந்து முடித்து தர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் மீண்டும் சாலை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.