மல்லிபட்டினம், டிச.15
ஒக்கி புயல் பாதிப்பால் இறந்து போன மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மீன்பிடித் தொழிலாளர் சங்க சேதுபாவாசத்திரம் கிளைச்செயலாளர் பி.பெரியண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் சிறப்புரையாற்றினார்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மீன்பிடித் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்டச்செயலாளர் தம்பிக்கோட்டை எஸ்.சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன், சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மீனவர் சங்க பிரதிநிதிகள் கே.குத்புதீன், எஸ்.நிஜாம் முகைதீன், ஏ.சையது முகமது, வி.நாகேந்திரன், என்.பாக்கியராஜ், சம்பை முகமது அப்துல் காதர், எம்.ஜாகிர் உசேன், தயார் சுல்தான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடைவீதியில் இருந்து மீன்வளத்துறை அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் மோனிகாவை சந்தித்து," ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு வழங்குவது போல் தலா ரூ 25 இலட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை உடனடியாக தேடி கண்டுபிடித்து குடும்பத்தில் சேர்க்க வேண்டும். மீனவர்களை காக்க உடனடியாக சர்வகட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
ஒக்கி புயல் பாதிப்பால் இறந்து போன மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மீன்பிடித் தொழிலாளர் சங்க சேதுபாவாசத்திரம் கிளைச்செயலாளர் பி.பெரியண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் சிறப்புரையாற்றினார்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மீன்பிடித் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்டச்செயலாளர் தம்பிக்கோட்டை எஸ்.சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன், சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மீனவர் சங்க பிரதிநிதிகள் கே.குத்புதீன், எஸ்.நிஜாம் முகைதீன், ஏ.சையது முகமது, வி.நாகேந்திரன், என்.பாக்கியராஜ், சம்பை முகமது அப்துல் காதர், எம்.ஜாகிர் உசேன், தயார் சுல்தான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடைவீதியில் இருந்து மீன்வளத்துறை அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் மோனிகாவை சந்தித்து," ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு வழங்குவது போல் தலா ரூ 25 இலட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை உடனடியாக தேடி கண்டுபிடித்து குடும்பத்தில் சேர்க்க வேண்டும். மீனவர்களை காக்க உடனடியாக சர்வகட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.