.

Pages

Friday, December 15, 2017

அதிராம்பட்டினத்தில் CBD இரத்ததான சேவை அமைப்பின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

அதிராம்பட்டினம், டிச.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் ( CBD ) இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

முகாமிற்கு அவ்வமைப்பின், மாவட்ட துணைத் தலைவர் அக்லன் கலீஃபா தலைமை வகித்தார். அவ்வமைப்பின், அதிரை பேரூர் தலைவர் இப்ராஹிம் அலி முன்னிலை வகித்தார்.

இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட தன்னார்வல இரத்த தான கொடையாளர்கள் தங்களது பெயர், இரத்த வகை, தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை அளித்து CBD இரத்த தான சேவை அமைப்பில் இணைந்து கொண்டனர்.
                         
இதில், அவ்வமைப்பின் செயற்குழு  உறுப்பினர்கள் சமீர் அலி, அப்ரித், ஃபாய்ஸ் அஹமது மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிராம்பட்டினத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டு, இதன் மூலம் அவசர தேவைக்கு இரத்த தானம், அவசரகால மருத்துவ உதவி, பேரிடர்கால மீட்பு உள்ளிட்ட பல்வேறு சமூகநலப் பணிகளில் இவ்வைமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வல இளைஞர்களால் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.