.

Pages

Saturday, December 16, 2017

அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.16
ஓகி புயலால் இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் சைஃபுதீன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே ஜியாவூதீன்,மாவட்ட கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளர் எஸ்.முகமது மீராசாகிப், அதிரை பேரூர் பொருளாளர் எம்.அப்துல் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் வழக்குரைஞர் நல்லதுரை கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், காணாமல் போன மீனவர்களை உடனடியாக தேடி கண்டுபிடித்து குடும்பத்தில் சேர்க்க  வேண்டும், பாதிப்படைந்த குமரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.