தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஊராட்சிகளிலும், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (16.12.2017) சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், பூக்கரணை, தில்லங்காடு ஆகிய கிராமங்களிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், கொன்றைக்காடு, காலகம், சொர்ணக்காடு ஆகிய இடங்களில் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 மானியமாக வழங்கி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டி சுகதாரமாக மக்கள் வசிக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் முழு சுகாதாரம் கடைப்பிடிக்கப்படும் மாவட்டமாக வருகின்ற 31.12.2017 முதல் அறிவிக்கப்படவுள்ளது. எனவே தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு தாமதப்படுத்தாமல் விரைவாக கட்டி முடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மணல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு மாட்டு வண்டி குவாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ள்து. இதனை பயன்படுத்தி இன்னும் 15 நாட்களுக்குள் தனி நபர் இல்ல கழிப்பறையினை கட்டி முடிக்க வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்;சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் கால்வாயில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பால் ஊட்டும் அறை, தனியார் பேருந்து தொழிலாளர்கள் ஓய்வு அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து தூய்iமாக பராமரிக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பட்டுக்கோட்டை அழகிரிசாமி மணி மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அழகிரிசாமி மணி மண்டபத்தில் முன்புறம் உள்ள வடிகால் கால்வாயினை சிமெண்ட்; கான்கீரிட் போட்டு மூட நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மர பயிர்களுக்கிடையில் ஊடு பயிராக பயிர் செய்யப்பட்டுள்ளதையும் மற்ற பயிர்களுக்கிடையிலும் ஊடு பயிராக பயிர் செய்யப்பட்டுள்ளதை கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் பதிவேட்டில் ஊடு பயிர்களை பதிவு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டாட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், பூக்கரணை, தில்லங்காடு ஆகிய கிராமங்களிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், கொன்றைக்காடு, காலகம், சொர்ணக்காடு ஆகிய இடங்களில் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக அரசு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 மானியமாக வழங்கி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டி சுகதாரமாக மக்கள் வசிக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் முழு சுகாதாரம் கடைப்பிடிக்கப்படும் மாவட்டமாக வருகின்ற 31.12.2017 முதல் அறிவிக்கப்படவுள்ளது. எனவே தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு தாமதப்படுத்தாமல் விரைவாக கட்டி முடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மணல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு மாட்டு வண்டி குவாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ள்து. இதனை பயன்படுத்தி இன்னும் 15 நாட்களுக்குள் தனி நபர் இல்ல கழிப்பறையினை கட்டி முடிக்க வேண்டுமென்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்;சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் கால்வாயில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பால் ஊட்டும் அறை, தனியார் பேருந்து தொழிலாளர்கள் ஓய்வு அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து தூய்iமாக பராமரிக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பட்டுக்கோட்டை அழகிரிசாமி மணி மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அழகிரிசாமி மணி மண்டபத்தில் முன்புறம் உள்ள வடிகால் கால்வாயினை சிமெண்ட்; கான்கீரிட் போட்டு மூட நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மர பயிர்களுக்கிடையில் ஊடு பயிராக பயிர் செய்யப்பட்டுள்ளதையும் மற்ற பயிர்களுக்கிடையிலும் ஊடு பயிராக பயிர் செய்யப்பட்டுள்ளதை கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் பதிவேட்டில் ஊடு பயிர்களை பதிவு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டாட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.