![]() |
கோப்புப்படம் |
துப்புரவு தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாமினை வருடத்திற்கு நான்கு தடவை நடத்த வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அதிரை சுற்றுச்சூழல் மன்றம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் வ.விவேகானந்தம்
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், சிற்றூராட்சிகள், மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற அமைப்புகளில் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.
இவர்கள் கழிவுநீர் சாக்கடைகளில் உள்ள அடைப்பை நீக்குதல், குப்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை தினந்தோறும் செய்து வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு தோல்நோய்கள், சுவாசக் கோளாறுகள், கண்நோய்கள், டெட்டனஸ், எலிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வரவாய்ப்புள்ளன.
எனவே, துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கையுறை, முகஉறை போன்ற பாதுகாப்பு சாதனங்களை வழங்கவேண்டும். மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின் படி மருத்துவ துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் வருடந்தோறும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சனவரி, ஏப்ரல், ஜுலை, அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களில் இலவசமாக முழு அளவிலான மருத்துவ பரிசோதனைகள், தேவையான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை தொடர்ந்து வழங்க ஆவண செய்ய வேண்டுகிறோம்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.