.

Pages

Saturday, December 16, 2017

ராகுல் காந்தி பதவியேற்பு ~ அதிரையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.16
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87 வது தலைவராக ராகுல் காந்தி  டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை  பதவியேற்றார். இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக,  அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சி பட்டுக்கோட்டை வட்டாரத் தலைவர் காசிநாதன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் கட்சி கொடி ஏற்றி வைத்தார். அதிரை பேரூர் தலைவர் கார்த்திகேயன் வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் அதிரை பாருக், ஏ கோவிந்தன், நாராயண சாமி, பி.திலகராஜ் கட்டபொம்மன், தெளலத் பாட்சா என்கிற சேக்தாவூது, முகமது காசிம், ராஜேந்திரன், எஸ். சம்பத், எம்.  நெய்னா மலை, எம். விஜயன், சாஜித் நஜீம், கே.ராஜா, பிரமநாதன், எம்.ஆர் ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.