அதிரை நியூஸ்: டிச.14
ஓமனில் தனது ஈரலை தானமாக வழங்கி தந்தையை காப்பாற்றிய மகள், இந்திய மருத்துவர் சாதனை
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ராயல் மருத்துவமனையில் சுமார் 12 மணிநேரம் நடைபெற்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது கதீஜா அல் பர்வாணி என்ற பெண் தனது தந்தைக்காக சுமார் 65 சதவிகித ஈரலை தானமாக வழங்கியதை தொடர்ந்து தந்தையும் மகளும் குணமடைந்தனர். மகள் தந்தைக்காக தானம் செய்ததில் பெரிதும் மகிழ்ந்துள்ளார். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது புகழ்பெற்ற இந்திய மருத்துவர் முஹமது ரெல்லா மற்றும் அவரது ஒமானிய மருத்துவ குழுவினர்.
ஓமன் நாட்டினர் பிற உடல் பாகங்களை தானமாக பெறுவது இயலாத ஒன்றாக கடந்த 2014 வருடம் வரை இருந்தது. ஒமானியர்கள் தங்களுக்குத் தேவையான உடற்பாகங்களான கிட்னி, இதயம், நுரையீரல், கண்கள் மற்றும் கணையங்களை பெறுவதற்காக பாகிஸ்தான், இந்தியா, எகிப்து, தாய்லாந்து போன்ற நாடுகளின் கள்ளச்சந்தையையே பெரிதும் நம்பி இருந்தனர் இதனால் அவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெருமளவில் செலவிட வேண்டி இருந்தது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் வருடம் ஓமனின் தலைமை முப்தி ஷேக் அஹமது அல் கலீலி அவர்கள் மூளைச்சாவு அடைவோரின் உடல் உறுப்புக்களை சில குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் தானமாக தரலாம் என பத்வா வழங்கியதை தொடர்ந்து பலரும் உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் அவர்களிலும் குறிப்பாக மருத்துவ துறையினர் உடல் உறுப்பு தானம் செய்திட பதிவு செய்துள்ளனர்.
எவராவது உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பினால் ஒமனில் உள்ள (அரசு) ராயல் மருத்துவமனைகளை அணுகி அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்தால் போதுமானது. ஒருவரிடமிருந்து பெறப்படும் உடல் உறுப்பு தானத்தை கொண்டு 8 பேருக்கு மறுவாழ்வு தர முடியும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஓமனில் தனது ஈரலை தானமாக வழங்கி தந்தையை காப்பாற்றிய மகள், இந்திய மருத்துவர் சாதனை
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ராயல் மருத்துவமனையில் சுமார் 12 மணிநேரம் நடைபெற்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது கதீஜா அல் பர்வாணி என்ற பெண் தனது தந்தைக்காக சுமார் 65 சதவிகித ஈரலை தானமாக வழங்கியதை தொடர்ந்து தந்தையும் மகளும் குணமடைந்தனர். மகள் தந்தைக்காக தானம் செய்ததில் பெரிதும் மகிழ்ந்துள்ளார். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது புகழ்பெற்ற இந்திய மருத்துவர் முஹமது ரெல்லா மற்றும் அவரது ஒமானிய மருத்துவ குழுவினர்.
ஓமன் நாட்டினர் பிற உடல் பாகங்களை தானமாக பெறுவது இயலாத ஒன்றாக கடந்த 2014 வருடம் வரை இருந்தது. ஒமானியர்கள் தங்களுக்குத் தேவையான உடற்பாகங்களான கிட்னி, இதயம், நுரையீரல், கண்கள் மற்றும் கணையங்களை பெறுவதற்காக பாகிஸ்தான், இந்தியா, எகிப்து, தாய்லாந்து போன்ற நாடுகளின் கள்ளச்சந்தையையே பெரிதும் நம்பி இருந்தனர் இதனால் அவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெருமளவில் செலவிட வேண்டி இருந்தது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் வருடம் ஓமனின் தலைமை முப்தி ஷேக் அஹமது அல் கலீலி அவர்கள் மூளைச்சாவு அடைவோரின் உடல் உறுப்புக்களை சில குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் தானமாக தரலாம் என பத்வா வழங்கியதை தொடர்ந்து பலரும் உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் அவர்களிலும் குறிப்பாக மருத்துவ துறையினர் உடல் உறுப்பு தானம் செய்திட பதிவு செய்துள்ளனர்.
எவராவது உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பினால் ஒமனில் உள்ள (அரசு) ராயல் மருத்துவமனைகளை அணுகி அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்தால் போதுமானது. ஒருவரிடமிருந்து பெறப்படும் உடல் உறுப்பு தானத்தை கொண்டு 8 பேருக்கு மறுவாழ்வு தர முடியும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.