.

Pages

Sunday, February 11, 2018

தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினராக அதிரை ஏ.முகமது நெய்னா ஆலிம் நியமனம்!

மவ்லவி. ஏ.முகமது நெய்னா
அதிராம்பட்டினம், பிப்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் மவ்லவி. ஏ. முகமது நெய்னா (வயது 62). கடந்த 39 ஆண்டுகளாக அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக் கல்லூரி பேராசிரியராகவும், கடந்த 43 ஆண்டுகளாக ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாமாகவும் பணியாற்றி வருகிறார். குர்ஆன் மாநாடு, மீலாது விழா, திருமண விழா, கல்லூரி பட்டமளிப்பு விழா போன்றவற்றில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார். கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான இஸ்லாமியத் திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினராக மவ்லவி ஏ.முகமது நெய்னாவை நியமனம் செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலர் (மு.கூ.பொ) தாரேஸ் அஹமது வெளியிட்டுள்ளார். இவரது பதவிக்காலம், அடுத்த 3 ஆண்டுகள் ஆகும். இதையடுத்து, ஊர் பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

3 comments:

  1. .அல்லாஹ் நன்மையாக்கி வைப்பானாக

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஹஜரத்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.