![]() |
மவ்லவி. ஏ.முகமது நெய்னா |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் மவ்லவி. ஏ. முகமது நெய்னா (வயது 62). கடந்த 39 ஆண்டுகளாக அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக் கல்லூரி பேராசிரியராகவும், கடந்த 43 ஆண்டுகளாக ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாமாகவும் பணியாற்றி வருகிறார். குர்ஆன் மாநாடு, மீலாது விழா, திருமண விழா, கல்லூரி பட்டமளிப்பு விழா போன்றவற்றில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார். கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான இஸ்லாமியத் திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினராக மவ்லவி ஏ.முகமது நெய்னாவை நியமனம் செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மைச் செயல் அலுவலர் (மு.கூ.பொ) தாரேஸ் அஹமது வெளியிட்டுள்ளார். இவரது பதவிக்காலம், அடுத்த 3 ஆண்டுகள் ஆகும். இதையடுத்து, ஊர் பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
.அல்லாஹ் நன்மையாக்கி வைப்பானாக
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஹஜரத்
ReplyDelete