அதிராம்பட்டினம், ஏப்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கட்டண கழிப்பறை செப்டிங் டாங்கிலிருந்து கழிவுகள் வெளியேறி அருகில் உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படுகிறது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் முகமது தம்பி, பசீர் அகமது, முகமது பாசித், அஜ்மல் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் முத்துக்குமாரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மனுதாரர்களிடம் உறுதி அளித்தாராம்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கட்டண கழிப்பறை செப்டிங் டாங்கிலிருந்து கழிவுகள் வெளியேறி அருகில் உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படுகிறது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் முகமது தம்பி, பசீர் அகமது, முகமது பாசித், அஜ்மல் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூர் துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் முத்துக்குமாரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மனுதாரர்களிடம் உறுதி அளித்தாராம்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)