தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 63 கிராமங்களில் கிராம சுயாட்சி இயக்கம் (கிராம சுயராஜ்ய அபியான்) ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (16.04.2018) திங்கட்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 63 கிராமங்களில் கிராம சுயராஜ்ய அபியான் திட்டம் 100 சதவிகிதம் எய்துவது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கியாளர்கள், எரிவாயு முகவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், விவசாயத்துறை, மின்சாரத்துறை இரு துறையை சேர்ந்த அலுவலர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டு 63 கிராமங்களிலும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்படவுள்ளது.
63 கிராமங்களில்...
1) 18 வயது நிறைவடைந்த அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனரா என்ற புள்ளி விவரம், வங்கி கணக்கு இல்லாத குடும்பத்திற்கு ஜீரோ இருப்பு சேமிப்புக் வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுக்க வேண்டும்.
2) பிரதம மந்திரியின் ஜீவன் திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த 50 வயது வரை உள்ளவர்கள் வங்கிக் கணக்கில் ஓராண்டு ஆயுள் காப்பீட்டு ரூ.330 செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
3) பிரதம மந்திரியின் சுரக்ஷா விபத்து காப்பீடு திட்டத்தில் ஓராண்டுக்கு ரூ.12 காப்பீடு செய்தால் அவர்களின் குடும்பத்தில் விபத்து முதல் இறப்பு ஏற்பட்டால் ரூ.2 இலட்சம் நிவாரணம் கிடைக்கும்.
4) 63 கிராமங்களில் அனைவருக்கும் மின்சார வழங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கு ரூ.50 கட்டணத்தில் ஒரு எல்.இ.டி. பல்பு பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஒவ்வொரு வீட்டின் உரிமையாளருக்கும் தெரிவிக்க வேண்டும். இதே எல்.இ.டி. பல்பு வெளி மார்க்கெட்டில் வாங்கினால்இதன் முழு விலை ரூ.100 ஆகும். அரசு மானிய விலையில் வழங்கும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த வேண்டுமென்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
5) மருத்துவ துறை அலுவலர்கள் 63 கிராமங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து முறையாக வழங்கப்பட்டு விட்டதா என்பதையும், கர்ப்பிணி தாய்மார்கள் ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
6) 63 கிராமங்களிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கு இலவச எரிவாயு இணைப்பு உள்ளதா என்பதை எரி வாயு முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு முன்பண கட்டணம் இல்லாமல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காகிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பணிகளை வருகிற மே 5ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட 63 கிராமங்களிலும மத்திய அரசு திட்டம் 100 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இந்த தேசிய திட்டத்தில் தங்கள் பணியை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வங்கியாளர்கள், எரிவாயு இணைப்பு முகவர்கள், செவிலியர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 63 கிராமங்களில் கிராம சுயராஜ்ய அபியான் திட்டம் 100 சதவிகிதம் எய்துவது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கியாளர்கள், எரிவாயு முகவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், விவசாயத்துறை, மின்சாரத்துறை இரு துறையை சேர்ந்த அலுவலர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டு 63 கிராமங்களிலும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்படவுள்ளது.
63 கிராமங்களில்...
1) 18 வயது நிறைவடைந்த அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனரா என்ற புள்ளி விவரம், வங்கி கணக்கு இல்லாத குடும்பத்திற்கு ஜீரோ இருப்பு சேமிப்புக் வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுக்க வேண்டும்.
2) பிரதம மந்திரியின் ஜீவன் திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த 50 வயது வரை உள்ளவர்கள் வங்கிக் கணக்கில் ஓராண்டு ஆயுள் காப்பீட்டு ரூ.330 செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
3) பிரதம மந்திரியின் சுரக்ஷா விபத்து காப்பீடு திட்டத்தில் ஓராண்டுக்கு ரூ.12 காப்பீடு செய்தால் அவர்களின் குடும்பத்தில் விபத்து முதல் இறப்பு ஏற்பட்டால் ரூ.2 இலட்சம் நிவாரணம் கிடைக்கும்.
4) 63 கிராமங்களில் அனைவருக்கும் மின்சார வழங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கு ரூ.50 கட்டணத்தில் ஒரு எல்.இ.டி. பல்பு பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஒவ்வொரு வீட்டின் உரிமையாளருக்கும் தெரிவிக்க வேண்டும். இதே எல்.இ.டி. பல்பு வெளி மார்க்கெட்டில் வாங்கினால்இதன் முழு விலை ரூ.100 ஆகும். அரசு மானிய விலையில் வழங்கும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த வேண்டுமென்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
5) மருத்துவ துறை அலுவலர்கள் 63 கிராமங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து முறையாக வழங்கப்பட்டு விட்டதா என்பதையும், கர்ப்பிணி தாய்மார்கள் ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
6) 63 கிராமங்களிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கு இலவச எரிவாயு இணைப்பு உள்ளதா என்பதை எரி வாயு முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு முன்பண கட்டணம் இல்லாமல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காகிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பணிகளை வருகிற மே 5ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட 63 கிராமங்களிலும மத்திய அரசு திட்டம் 100 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இந்த தேசிய திட்டத்தில் தங்கள் பணியை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வங்கியாளர்கள், எரிவாயு இணைப்பு முகவர்கள், செவிலியர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.