.

Pages

Monday, April 30, 2018

திருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்டி நாளை (மே.1 ந் தேதி) நடைபெறும்!

அதிராம்பட்டினம், ஏப்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15-வது திருக்குர்ஆன் மாநாடு, அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், எதிர்வரும் மே 4, 5, 6 ஆகிய 3 தினங்கள் நடைபெற உள்ளது.

இதையொட்டி நடைபெறும் போட்டிகளில் ஒன்றாகிய பெண்களுக்கான (15 வயதுக்கு உட்பட்ட முதல்நிலை, 16-20 வயதுக்கு உட்பட்ட மேல்நிலை) பேச்சுப் போட்டியில் முன்பதிவு செய்துள்ள மாணவிகளுக்கு நாளை மே.1 ந் தேதி காலை 9 மணிக்கு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் போட்டி நடைபெறும் என அதிரை பைத்துல்மால் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.