.

Pages

Thursday, April 19, 2018

முழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும் பணி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.19
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை,  அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணியில்,
பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டிடம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடைகள், மழை நீர் வடிகால், வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை, டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என கட்டப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் ரயில் நிலைய மேற்கூரை அமைப்பதற்கான முதல் கட்டப்பணி கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இதில், 50 டன் இரும்பில் மேற்கூரையை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் செய்து முடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2 வது கட்டமாக 90 டன் இரும்பில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பர்லின் ஷெல்டர் மொத்தம் 140 எண்ணிக்கையில், தற்போது 120 தயார் செய்யப்பட்டு உள்ளது. வெல்டிங் பணிகளில் 15 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பின்னர், நடைமேடை பகுதிகளில் அடித்தளம் அமைக்கப்பட்டு, அதில் தூண்கள் நிலைநிறுத்தப்படும். இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது பிளாட் பாரம் ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், 1-வது பிளாட் பாரத்தில், தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும்  வரும் மே முதல் வாரத்திற்குள் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
சேக்கனா நிஜாம்
ஏ.சாகுல் ஹமீது
முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.