தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மீன் மார்க்கெட்டிலிருந்து தூய்மை பாரத நாள் கொண்டாட்டம் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (18.04.2018) புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கிராம சுயாட்சி இயக்கம், ஏப்ரல் 14 முதல் மே 5ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 14.04.2018 அன்று கிராம சுயாட்சி இயக்க பேரணி நடைபெற்றது. இன்று இரண்டாவது நிகழ்ச்சியாக கும்பகோணத்தில் பாரத தூய்மை நாள் கொண்டாட்டம் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்கள்.
இப்பேரணியானது மீன் மார்க்கெட்டிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் மகாமகம் குளத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 3000த்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் ஒட்டு மொத்த தூய்மை பணி இன்று நடைபெறுகிறது. இப்பணியில் அனைத்து கிராமங்களிலும் தூய்மை காவலர்களை கொண்டு தெருக்களை தூய்மைப்படுத்துதல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தல், மகளிர் சுகாதார வளாகத்தை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது.
பின்னர், கும்பகோணம் ஊராட்சி பகுதியான பழவந்தான்கட்டளை, அண்ணல்அக்ரஹாரம் ஊராட்சியிலும் மண்புழு உரம் தயாரித்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுத்தல் பணி, தூய்மை பணி போன்ற பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து குமப்கோணம் நகராட்சி அலுவலகத்தில் திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது; பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத நீர் நிலைகளை பராமரிக்க வேண்டுமெனவும், நீர்நிலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டுமெனவும், பேருந்து நிலையத்தை தூய்மை பராமரிக்க வேண்டுமெனவும், மகளிர் சுகாதார வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். தனி நபர் இல்ல கழிப்பறை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற பல்வேறு பணிகள் விரைந்து செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் வட்டார அலுவலர்கள், வட்டாட்சியாக்ள் கலந்து கொண்டனர்.
கிராம சுயாட்சி இயக்கம், ஏப்ரல் 14 முதல் மே 5ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 14.04.2018 அன்று கிராம சுயாட்சி இயக்க பேரணி நடைபெற்றது. இன்று இரண்டாவது நிகழ்ச்சியாக கும்பகோணத்தில் பாரத தூய்மை நாள் கொண்டாட்டம் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்கள்.
இப்பேரணியானது மீன் மார்க்கெட்டிலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் மகாமகம் குளத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 3000த்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் ஒட்டு மொத்த தூய்மை பணி இன்று நடைபெறுகிறது. இப்பணியில் அனைத்து கிராமங்களிலும் தூய்மை காவலர்களை கொண்டு தெருக்களை தூய்மைப்படுத்துதல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தல், மகளிர் சுகாதார வளாகத்தை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது.
பின்னர், கும்பகோணம் ஊராட்சி பகுதியான பழவந்தான்கட்டளை, அண்ணல்அக்ரஹாரம் ஊராட்சியிலும் மண்புழு உரம் தயாரித்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுத்தல் பணி, தூய்மை பணி போன்ற பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து குமப்கோணம் நகராட்சி அலுவலகத்தில் திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது; பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத நீர் நிலைகளை பராமரிக்க வேண்டுமெனவும், நீர்நிலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டுமெனவும், பேருந்து நிலையத்தை தூய்மை பராமரிக்க வேண்டுமெனவும், மகளிர் சுகாதார வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். தனி நபர் இல்ல கழிப்பறை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற பல்வேறு பணிகள் விரைந்து செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், ஊராட்சி உதவி இயக்குநர் முருகேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் வட்டார அலுவலர்கள், வட்டாட்சியாக்ள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.