.

Pages

Tuesday, April 17, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 56 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/04/2018 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : அகமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை          : A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
வரவேற்புரை      : A. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல்  : அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை    : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் மாதம் மெகா கூட்டமும் 5-ம் வருட இஃப்தார் நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடுகள் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொறுப்புதாரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

2) அல்லாஹ்வின் கிருபையால் வரும் ரமலான் பிறை 3-அன்று (18/05/2018) வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணியளவில் வழமை போல் பத்தாவில் உள்ள கிளாசிக் ஆடிட்டோரியத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதிரை அணைத்து முஹல்லா வாசிகள் அனைவர்களும் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) அடுத்தமாதம் மெகா கூட்ட்டத்திற்கான சிறுவர்களின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவமாக அமைவதால் தங்கு தடையின்றி தங்களின் குழந்தைகளின் பெயர்களை பொறுப்புதாரியான சகோ.சேக் மன்சூர் (MOB:0548880956) அவர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் வரும் மே மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் நமதூரில் பைத்துல்மால் சார்பில் நடைபெற இருக்கும் 15-வது குர்ஆன் மாநாடு மற்றும் ABM-ன் 25-வது வெள்ளிவிழா மற்றும் வெள்ளிமலர் வெளியீடு சிறப்பாக நடைபெற அதிரை அணைத்து  ஜமாத்தினர்களின் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ID CARD விஷயமாக விடுபட்ட உறுப்பினர்களின் புகைப்படம் மற்றும் ADDRESS விவரங்களை இன்னும் ஒரு வாரத்தில் சகோ.அப்துல் மாலிக் அவர்களிடம் கொடுக்குமாறு   கேட்டுக் கொள்ளப்பட்டு நினைவூட்டப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.