.

Pages

Wednesday, April 25, 2018

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)

பேராவூரணி ஏப்.25
பேராவூரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை அன்று நடைபெற்றது.

பேராவூரணி காவல்துறை- டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிக்கு பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமை வகித்தார். காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் பள்ளி முதல்வர் சுரேஷ், காவல் உதவி ஆய்வாளர் இளம்பரிதி, லயன்ஸ் ஜி.ராஜா,  ஜே.சி.குமரப்பா பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், வருவாய்துறையினர், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் என  500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி மெயின்ரோடு, பட்டுக்கோட்டை சாலை, சேதுசாலை என முக்கிய சாலைகள் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு தட்டிகளை கைகளில் ஏந்தியவாறு, விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.