.

Pages

Sunday, April 22, 2018

அமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி!

அதிரை நியூஸ்: ஏப்.22
அமெரிக்காவில் இறந்த சவுதியருடைய 'சந்தூக்' பெட்டி மாறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பத்ர் அபூ தாலிப் என்பவரின் தந்தை இறந்ததாக தகவல் வந்ததையடுத்து அவருடைய ஜனாஸாவை சவுதி அரேபியாவிற்கு அனுப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ஜனாஸாவை சுமந்த சந்தூக் பெட்டியும் (Coffin) அமெரிக்காவிலிருந்து ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமானம் நிலையத்திற்கு வந்தடைந்தது.

சந்தூக் பெட்டியிலிருந்த எண்ணும் தங்களுக்கு கிடைத்த ஷிப்பிங் எண்ணும் வேறுவேறாக இருந்த காரணத்தால் குழப்பமடைந்த குடும்பத்தினர் பெட்டியை திறந்து பார்த்தால் உள்ளே யாரோ ஒரு ஐரோப்பியருடைய ஜனாஸா இருந்துள்ளதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்பு 20 நாட்கள் தேடலுக்குப் பின் சந்தூக் பெட்டி மாறிச் சென்ற நாட்டிலிருந்து சவுதியருடைய ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது. மேல் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.