அதிரை நியூஸ்: ஏப்.28
இதுவரை கண்டெடுக்கப்பட்ட செய்திக் கடிதங்களிலேயே மிகப்பழமையானதாக கருதப்படும் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த கடிதத்தை மேற்கு ஆஸ்திரேலியா பகுதியிலுள்ள வெட்ஜ் தீவு அருகே கைம், டோன்யா இல்மேன் என்ற இருவர் கடலிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.
கருப்பு நிற பாட்டில் மிதந்து வருவதை கவனித்த டோன்யா முதலில் அதை குப்பையாக நினைத்தார் ஆனால் கூர்ந்து கவனித்த போது அதனுள் ஒரு பழைய சுற்றப்பட்ட நிலையிலான கடிதம் இருந்ததை கண்டு பிரம்மித்தார். அந்தக் கடிதம் 1886 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி 'பவுலா' (Paula) என்கிற ஜெர்மானியா ஆராய்ச்சி கப்பலில் இருந்து எழுதி மிதக்கவிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், இதை கண்டெடுப்பவர்கள் எங்கு கண்டெடுத்தீர்கள் என்ற விபரங்களுடன் ஜெர்மனியின் கடற்படை ஆய்வகத்திற்கு (German Naval Observatory) தெரிவிக்குமாறு வேண்டப்பட்டிருந்தது. கடல் நீரோட்டம் குறித்த இந்த ஆராய்ச்சியை ஜெர்மனி 1864 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாட்டிலில் அடைத்து விடப்பட்ட இந்த கடித செய்தியை 'பவுலா' கப்பலின் கேப்டன் இந்தியப் பெருங்கடலை கடக்கும் போது கடலில் மிதக்கவிட்டது ஜெர்மானிய ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கடிதம் Western Australian Maritime Museum என்ற அருங்காட்சியகத்தில் 2020 வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Mental Floss / Msn
தமிழில்: நம்ம ஊரான்
இதுவரை கண்டெடுக்கப்பட்ட செய்திக் கடிதங்களிலேயே மிகப்பழமையானதாக கருதப்படும் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த கடிதத்தை மேற்கு ஆஸ்திரேலியா பகுதியிலுள்ள வெட்ஜ் தீவு அருகே கைம், டோன்யா இல்மேன் என்ற இருவர் கடலிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.
கருப்பு நிற பாட்டில் மிதந்து வருவதை கவனித்த டோன்யா முதலில் அதை குப்பையாக நினைத்தார் ஆனால் கூர்ந்து கவனித்த போது அதனுள் ஒரு பழைய சுற்றப்பட்ட நிலையிலான கடிதம் இருந்ததை கண்டு பிரம்மித்தார். அந்தக் கடிதம் 1886 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி 'பவுலா' (Paula) என்கிற ஜெர்மானியா ஆராய்ச்சி கப்பலில் இருந்து எழுதி மிதக்கவிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், இதை கண்டெடுப்பவர்கள் எங்கு கண்டெடுத்தீர்கள் என்ற விபரங்களுடன் ஜெர்மனியின் கடற்படை ஆய்வகத்திற்கு (German Naval Observatory) தெரிவிக்குமாறு வேண்டப்பட்டிருந்தது. கடல் நீரோட்டம் குறித்த இந்த ஆராய்ச்சியை ஜெர்மனி 1864 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாட்டிலில் அடைத்து விடப்பட்ட இந்த கடித செய்தியை 'பவுலா' கப்பலின் கேப்டன் இந்தியப் பெருங்கடலை கடக்கும் போது கடலில் மிதக்கவிட்டது ஜெர்மானிய ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கடிதம் Western Australian Maritime Museum என்ற அருங்காட்சியகத்தில் 2020 வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Mental Floss / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.