.

Pages

Friday, April 20, 2018

அதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாளை (ஏப்.21) முதல் ஏப்.25 வரை 5 நாட்கள் அவ்வப்போது மின்தடை!

அதிராம்பட்டினம், ஏப்.20
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் த.நா சங்கரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
நெம்மேலிதிப்பியக்குடி ~ பட்டுக்கோட்டை 1 மற்றும் 2 வது மின் பாதையில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சரி செய்வதற்காக ஆலடிகுமுளை  பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் இரு புதிய உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளும், 110 கி.வோ பேராவூரணி துணை மின் நிலையத்தில் திறன் மின் மாற்றியைத் தரம் உயர்த்தும் பணிகளும் ஏப்.21 ந் தேதி முதல் ஏப். 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பணிகளின் போது ஏற்படும் கூடுதல் மின் பளுவை ஈடு செய்யும் விதமாக ஏப்.21 ம் தேதி காலை 9 மணி முதல் ஏப்.25 ம் தேதி மாலை 5 மணி வரை 5 நாட்களுக்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இருமுனை மின்சாரம் வழங்கவும் அல்லது தேவை ஏற்பட்டால் மின்சார நிறுத்தமும் மேற்கொள்ளப்படும்.

அறிவிப்பில் கூறியிருக்கும் காலக்கட்டத்தில், அதிராம்பட்டினம் பகுதிகளிலும் அவ்வப்போது  மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.