.

Pages

Monday, April 23, 2018

தஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் - குளங்கள் - கால்வாய்களில் உள்ள வண்டல் மண்-சவுடுமண் -களிமண் ஆகிய சிறுவகைக் கனிமங்களை விவசாயம் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துக்கொள்ள  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் - குளங்கள் - கால்வாய்களிலிருந்து வண்டல் மண் - சவுடு மண் - களிமண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாயம் - வீட்டு உபயோகம் - மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 1856 ஏரிகள் - குளங்கள் - வாய்க்கால்களிலிருந்து வண்டல் மண் - சவுடு மண் - களி மண்  போன்ற கனிமங்களை. விவசாய நிலங்களை மேம்படுத்துதல். வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இலவசமாக எடுத்துச்செல்ல சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப்போல இந்த ஆண்டும் வட்டாட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலம் வண்டல மண் - சவுடு மண் - களிமண் எடுக்க. விண்ணப்பிக்கும் கால்வாய் அமைந்துள்ள அல்லது அதனைச் சுற்றியுள்ள வருவாய் கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும்.

விவசாயப் பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்திற்கு  2 ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமலும் மற்றும் புன்செய் நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் -சவுடு மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும், பொதுமக்களின் சொந்தப் பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

விவசாயம். மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு மண் எடுக்க வழங்கப்படும் அனுமதிச்சீட்டு 20 நாட்கள் செல்லத்தக்கதாக இருக்கும். எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் தங்களது சொந்த உபயோகத்திற்கு வண்டல் மண் - சவுடு மண் - களி மண் போன்றவை தேவைப்படுவோர் தொடர்புடைய வட்டாட்சியர்களிடம்  விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொண்டு சவுடுமண் - களிமண் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மண் எடுக்க அனுமதி வேண்டுவோர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அனைத்து வட்டங்களிலும். நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.