.

Pages

Wednesday, April 25, 2018

விளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள்ள அமீரக அரசு அனுமதி!

அதிரை நியூஸ்: ஏப். 25
அமீரக அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய ஒப்புதல்களின்படி, அமீரகத்தில் வாழும் அனைத்து நாட்டு வீரர்களும் அமீரகத்தின் சார்பாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இப்புதிய சட்டத்தின்படி அமீரக தாய்க்கும் வெளிநாட்டு தந்தையர்களுக்கும் பிறந்த குழந்தைகள், அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்போர், அமீரகத்தில் பிறந்த வெளிநாட்டவர்கள் உட்பட அமீரக ரெஸிடென்ஸ் விசாவில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டவர்களும் அமீரகத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அமீரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டு விளையாடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் சிறப்பு அனுமதியின் பேரில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அமீரகத்தின் சார்பாக சில விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று வருகின்றனர். மால்டோவா நாட்டைச் சேர்ந்த 3 ஜூடோ விளையாட்டு வீரர்கள், 2 எத்தியோப்பிய ஓட்டப் பந்தய வீரர்கள் என கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அமீரகத்தின் சார்பாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source: WAM / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.