.

Pages

Saturday, April 28, 2018

சீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்து கதறக்கதற பள்ளிக்கூடம் கொண்டு சென்ற தந்தை (வீடியோ)

அதிரை நியூஸ்: ஏப்.28
சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்வதென்றாலே கசக்கும், பெரும்பாலான குழந்தைகளின் இயல்பும் அதுவே. பெற்றோர்களின் இயல்பு தனது குழந்தை ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்று படித்து பெரியாளாக வேண்டும் என்பதே. இந்த போராட்டத்தில் பெரும்பாலும் தாய்மார்கள் அன்பால் வென்றுவிடுவார்கள், தந்தையர்களோ பாசத்தைக் கூட சிலவேளைகளில் வன்முறையாக வெளிப்படுத்திவிடுவார்கள் அதனால் விளைவுகளும் விபரீதமாகிவிடுவது உண்டு.

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் யுன்ஃபு எனும் நகரத்தில் (Guangdong city of Yunfu) ஒருவர் ஒரு சிறுவயது பெண் குழந்தையை தனது பைக் பின் சீட்டில் வைத்துக்கட்டிய நிலையில் நகர வீதிகளின் வழியாக கொண்டு சென்றார். குழந்தையோ செல்லும் வழியெங்கும் கட்டப்பட்ட நிலையில் கதறித் தீர்த்தது. பார்ப்பவர்களுக்கு யரோ ஒருவர் குழந்தையை கடத்திச் செல்வது போல் தோற்றமளித்துள்ளது.

இந்த கொடிய காட்சியின் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போலீஸார் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்தனர். தனது பெண் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல மறுத்ததாலேயே அவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதாக அவர் விளக்கமளித்ததை ஏற்றுக் கொண்ட போலீஸார் அவரை கடுமையாக எச்சரித்து, மன்னித்து அனுப்பிவிட்டனர்.

இதேபோல் சீனாவில் நடைபெற்ற மற்றுமொரு சம்பவத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 4 வயது மகனை தூக்கியெறிந்த அதிர்ச்சிகர சம்பவமும் வீடியோ பதிவாக சமூக தளங்களில் சுற்றி வந்தது. பிறப்பு முதல் இதயக்குறைபாடுள்ள இந்த சிறுவனுக்கு 'புத்திபடித்து' கொடுக்கவே அவ்வாறு செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். மேல் விபரங்கள் ஏதும் சொல்லப்படவில்லை.

Sources: medium.com / Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.