தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான வாலிபால் போட்டியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையிலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையிலும், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நேற்று (23.04.2018) தொடங்கி வைத்தார்.
மாநில அளவிலான வாலிபால் போட்டியை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு தொடங்கி வைத்து பேசியதாவது;
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், வீரர் வீராங்கனைகள் வாலிபால் போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். விளையாட்டு வீரர்கள், தங்களுடைய தனித்திறமையை வெளி கொண்டு வருவதற்காக அம்மா அவர்களின் ஆட்சியில் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக வீரர் வீராங்கனைகள் சர்வதேச அளவில் பங்குபெற்று பதக்கங்களை பெற்று வருகிறார்கள். இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் வழங்கப்படாத அளவிற்கு மாநில அளவிலான போட்டிகளுக்கு முதற்பரிசுத்தொகையாக ரூ.1 இலட்சமும் இரண்டாம் பரிசுத்தொகையாக ரூ.75ஆயிரமும், மூன்றாம் பரிசுத்தொகையாக ரூ.50ஆயிரமும் வழங்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 இலட்சமும், இரண்டாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.30 இலட்சமும், மூன்றாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.20 இலட்சமும், தேசிய மற்றும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் முதலிடம் வெற்றி பெற்றுபவர்கள் ரூ.5 இலட்சமும், இரண்டாமிடம் வெற்றி பெற்றவர்கள் ரூ.3 இலட்சமும், மூன்றாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 இலட்சமும் வழங்கப்படும்.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட அன்னை சத்யா விளையாட்டரங்கம்; அனைத்து விளையாட்டுகளும் விளையாடுவதற்கு போதிய கட்டமைப்பு வதசிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் உருவாக்கி கொடுத்துள்ளார்கள். வீரர் வீராங்கனை போட்டிகளில் வெற்றி பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்.பண்டரிநாதன், நிக்கல்சன் வங்கி துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.சரவணன்,வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான வாலிபால் போட்டியை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு தொடங்கி வைத்து பேசியதாவது;
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், வீரர் வீராங்கனைகள் வாலிபால் போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். விளையாட்டு வீரர்கள், தங்களுடைய தனித்திறமையை வெளி கொண்டு வருவதற்காக அம்மா அவர்களின் ஆட்சியில் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக வீரர் வீராங்கனைகள் சர்வதேச அளவில் பங்குபெற்று பதக்கங்களை பெற்று வருகிறார்கள். இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் வழங்கப்படாத அளவிற்கு மாநில அளவிலான போட்டிகளுக்கு முதற்பரிசுத்தொகையாக ரூ.1 இலட்சமும் இரண்டாம் பரிசுத்தொகையாக ரூ.75ஆயிரமும், மூன்றாம் பரிசுத்தொகையாக ரூ.50ஆயிரமும் வழங்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 இலட்சமும், இரண்டாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.30 இலட்சமும், மூன்றாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.20 இலட்சமும், தேசிய மற்றும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் முதலிடம் வெற்றி பெற்றுபவர்கள் ரூ.5 இலட்சமும், இரண்டாமிடம் வெற்றி பெற்றவர்கள் ரூ.3 இலட்சமும், மூன்றாமிடம் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 இலட்சமும் வழங்கப்படும்.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட அன்னை சத்யா விளையாட்டரங்கம்; அனைத்து விளையாட்டுகளும் விளையாடுவதற்கு போதிய கட்டமைப்பு வதசிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் உருவாக்கி கொடுத்துள்ளார்கள். வீரர் வீராங்கனை போட்டிகளில் வெற்றி பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்.பண்டரிநாதன், நிக்கல்சன் வங்கி துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.சரவணன்,வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.