தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத்தின் 11 புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக தேர்தலில் போட்டியிட இன்று (ஏப்.30) திங்கட்கிழமை வேட்பு மனுதாக்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில், திமுகவினர் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய விண்ணப்ப மனுவைப் பெற கூட்டுறவு சங்கத்திற்கு திங்கட்கிழமை காலை சென்றனர். ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அலுவலர் சங்கத்திற்கு வராததால், ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், கூட்டுறவு சங்கத்தின் உள்ளே அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.