.

Pages

Thursday, April 26, 2018

அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.26
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரியில் 'ரஹ்மானியா ஆலிம்' பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு, மவ்லவி எல்.எம்.எஸ் முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கே.டி. முஹம்மது குட்டி ஆலிம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதில் கல்லூரி மாணவர்கள் கே. ஷாநவாஸ், சி.கே முகமது அஸ்ரப், எம். அபுதாகிர், எம். முகமது யாசிர், எம். சல்மானுல் பாரிஸ் ஆகிய 5 பேருக்கு 'மவ்லவி ~ ஆலிம் ரஹ்மானி' பட்டங்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக வேலூர் அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் மவ்லவி ஏ. முஹம்மது ஷப்பீர் அலி கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.

அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர்கள் மவ்லவி கே.டி முகமது ஜாபிர், மவ்லவி தேங்கை சரபுதீன், சென்னை மண்ணடி மாமூர் பள்ளிவாசல் இமாம் மவ்லவி கே.ஏ அப்துல் ரஹ்மான், ஜமாத்துல் உலமா சபை தமிழ் மாநிலத் தலைவர் மவ்லவி பி.ஏ காஜா முயீனுத்தீன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ. முஹம்மது நெய்னா வரவேற்றுப் பேசினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.