அதிராம்பட்டினம், ஏப்.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைத்தெரு ஐஸ் பேக்டரிக்கு அடுத்து அமைந்துள்ள எஸ்.எம்.ஏ அன்வர் பந்தல் கொட்டகையில் புதன்கிழமை இரவு திடீரென தீ மளமளவென பரவியது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த யூகலிப்டஸ் மரங்கள், கீற்றுகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவல் அறிந்த தன்னார்வல இளைஞர்கள் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னர், தீ விபத்து பற்றி தகவல் அறிந்த பேராவூரணி தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைத்தெரு ஐஸ் பேக்டரிக்கு அடுத்து அமைந்துள்ள எஸ்.எம்.ஏ அன்வர் பந்தல் கொட்டகையில் புதன்கிழமை இரவு திடீரென தீ மளமளவென பரவியது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த யூகலிப்டஸ் மரங்கள், கீற்றுகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து தகவல் அறிந்த தன்னார்வல இளைஞர்கள் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னர், தீ விபத்து பற்றி தகவல் அறிந்த பேராவூரணி தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.