அதிராம்பட்டினம், ஏப்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15-வது திருக்குர்ஆன் மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, திருக்குர்ஆன் மாநாடு குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் தலைமை வகித்தார். அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத், செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொடக்க உரை ஆற்றினார்.
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15 வது திருக்குர் ஆன் மாநாடு, புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், எதிர்வரும் மே 4, 5, 6 ஆகிய 3 தினங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், மாநாடு முன்னேற்பாடு பணிகள், வெள்ளி விழா ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு குறித்து விவாதிக்கப்பட்டன. முடிவில் அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், அதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு குழுவினர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
திருக்குர் ஆன் மாநாட்டில், கிராத், சூரா மனனம், பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி, அல்குர் ஆன் அறிவமுதப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 1371 போட்டியாளர்கள் தங்களது பெயரினை அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் முன்பதிவு செய்து உள்ளனர். நாளை (ஏப்.25) புதன்கிழமை முதல் போட்டிகள் தொடங்க உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15-வது திருக்குர்ஆன் மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, திருக்குர்ஆன் மாநாடு குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் தலைமை வகித்தார். அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத், செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொடக்க உரை ஆற்றினார்.
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15 வது திருக்குர் ஆன் மாநாடு, புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், எதிர்வரும் மே 4, 5, 6 ஆகிய 3 தினங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், மாநாடு முன்னேற்பாடு பணிகள், வெள்ளி விழா ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு குறித்து விவாதிக்கப்பட்டன. முடிவில் அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், அதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு குழுவினர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
திருக்குர் ஆன் மாநாட்டில், கிராத், சூரா மனனம், பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டி, அல்குர் ஆன் அறிவமுதப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், 1371 போட்டியாளர்கள் தங்களது பெயரினை அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் முன்பதிவு செய்து உள்ளனர். நாளை (ஏப்.25) புதன்கிழமை முதல் போட்டிகள் தொடங்க உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.