அதிராம்பட்டினம், ஏப்.17
காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எஸ். மீரா சாஹிப் தலைமை வகித்தார். அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பழ.சக்திவேல், மாவட்டத் தலைவர் ராவண பிரபு, மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன், பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் தேவராஜ், ஆசிரியர் (ஓய்வு) இராசேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
முன்னதாக, அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் முனாப் வரவேற்றுப் பேசினார். முடிவில் அதிரை பேரூர் துணைச் செயலாளர் முகமது பாசித் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டு, காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும் முழக்கமிட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எஸ். மீரா சாஹிப் தலைமை வகித்தார். அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பழ.சக்திவேல், மாவட்டத் தலைவர் ராவண பிரபு, மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன், பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் தேவராஜ், ஆசிரியர் (ஓய்வு) இராசேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
முன்னதாக, அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் முனாப் வரவேற்றுப் பேசினார். முடிவில் அதிரை பேரூர் துணைச் செயலாளர் முகமது பாசித் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டு, காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும் முழக்கமிட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.