அதிராம்பட்டினம், ஏப்-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எம்.எஸ் தாஜுதீன் தலைமை
வகித்தார். பள்ளி அரபிக் ஆசிரியர் மவ்லவி. எம்.எப் சேக்தாவூது மிஸ்பாஹி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிரை நியூஸ் ஆசிரியர் எம்.நிஜாமுதீன், லயன்ஸ் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் வகுப்பளவில் முதல் தரம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்று பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வென்ற மொத்தம் 140 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக பள்ளி ஆசிரியை ஜெயசித்ரா வரவேற்றுப் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி பள்ளி ஆண்டறிக்கையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை அகிலா நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெற்றிலைக்காரத் தெருவில் அமைந்துள்ள வெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எம்.எஸ் தாஜுதீன் தலைமை
வகித்தார். பள்ளி அரபிக் ஆசிரியர் மவ்லவி. எம்.எப் சேக்தாவூது மிஸ்பாஹி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிரை நியூஸ் ஆசிரியர் எம்.நிஜாமுதீன், லயன்ஸ் எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் வகுப்பளவில் முதல் தரம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்று பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வென்ற மொத்தம் 140 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக பள்ளி ஆசிரியை ஜெயசித்ரா வரவேற்றுப் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி பள்ளி ஆண்டறிக்கையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை அகிலா நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.