பேராவூரணி ஏப்.25
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், டெல்டா மாவட்டத்திற்கு காவிரியில் தண்ணீர் விடாமல் திட்டமிட்டு, பாலைவனமாக்கி எரிவாயு எடுக்க திட்டமிடும் மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் பேராவூரணியில், ஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் நடைபெற்றது.
புதன்கிழமை அன்று மாலை பேராவூரணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் சித்திரவேலு முன்னிலை வகித்தார். சிபிஐ நிர்வாகி ராஜமாணிக்கம், பி.ஏ.கருப்பையா, காங்கிரஸ் கட்சி குருவிக்கரம்பை சம்பத், பெரியார் அம்பேத்கர் கழக மாவட்ட செயலாளர் அனல் ச.ரவீந்திரன், முருகானந்தம், தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் குழு உறுப்பினர் மா.ந.விடுதலை மறவன், மதுக்கூர் நகரச்செயலாளர் பு.கோபி, பவனேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க டெல்டாவை அழிக்காதே" "உழவு நடக்கும் டெல்டாவில் எழவு நடக்க வைக்காதே" "காவிரி எங்கள் பிறப்புரிமை.... எவருக்கும் இல்லை காப்புரிமை" "காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு" என முழக்கங்களை எழுப்பியவாறு,
ஏர்க்கலப்பை பிரச்சார பயணம் அண்ணாசிலையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், டெல்டா மாவட்டத்திற்கு காவிரியில் தண்ணீர் விடாமல் திட்டமிட்டு, பாலைவனமாக்கி எரிவாயு எடுக்க திட்டமிடும் மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் தமிழக மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் பேராவூரணியில், ஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் நடைபெற்றது.
புதன்கிழமை அன்று மாலை பேராவூரணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் சித்திரவேலு முன்னிலை வகித்தார். சிபிஐ நிர்வாகி ராஜமாணிக்கம், பி.ஏ.கருப்பையா, காங்கிரஸ் கட்சி குருவிக்கரம்பை சம்பத், பெரியார் அம்பேத்கர் கழக மாவட்ட செயலாளர் அனல் ச.ரவீந்திரன், முருகானந்தம், தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் குழு உறுப்பினர் மா.ந.விடுதலை மறவன், மதுக்கூர் நகரச்செயலாளர் பு.கோபி, பவனேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
"ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க டெல்டாவை அழிக்காதே" "உழவு நடக்கும் டெல்டாவில் எழவு நடக்க வைக்காதே" "காவிரி எங்கள் பிறப்புரிமை.... எவருக்கும் இல்லை காப்புரிமை" "காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு" என முழக்கங்களை எழுப்பியவாறு,
ஏர்க்கலப்பை பிரச்சார பயணம் அண்ணாசிலையில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.