ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், வெற்றி வாகை சூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் வாழ்த்து தெரிவித்தார். வெற்றி வாய்ப்பை வழங்கிய ஜார்கண்ட் மாநில பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கூறியது;
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், இ.யூ. முஸ்லிம் லீக் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் இ. யூ. முஸ்லிம் லீக் கட்சிக்கு அதிக ஆதரவளித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிடி மாநகராட்சியில் 6 இடங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. மதுப்பூர் நகராட்சியில் 2 இடங்களை முஸ்லிம் லீக் கைப்பற்றி உள்ளது. ராம்கார் நகராட்சி 10 வது வார்டில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் இந்தர் தேவ் ராம் என்ற சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஜார்கண்டில் உண்மை உணரப்பட்டது. நன்றி ஜார்கண்ட் மக்களுக்கு.
ReplyDelete