அதிராம்பட்டினம், ஏப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பள்ளித் தெரு அருகே உள்ள சிறு பாலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம். புதிய பாலம் அமைத்து தர பொதுமக்கள் ~ வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப் கூறியது:
தினந்தோறும் இந்த பாலம் வழியே இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களால் கார்கள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் பாலத்தில் கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்.
எனவே, ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக பாலம் அமைத்துத் தர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பள்ளித் தெரு அருகே உள்ள சிறு பாலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம். புதிய பாலம் அமைத்து தர பொதுமக்கள் ~ வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப் கூறியது:
தினந்தோறும் இந்த பாலம் வழியே இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களால் கார்கள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் பாலத்தில் கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்.
எனவே, ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக பாலம் அமைத்துத் தர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.