அதிராம்பட்டினம், ஜூலை 31
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகளிலும் தூய்மைப் பணிகளில் துப்பரவுப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரம் தேங்கிக் காணப்படும் குப்பை கூளங்கள் அகற்றுவது, கழிவு நீர் வடிகாலில் பிளாஸ்டிக் அடைப்புகளை சீர்செய்வது, திறந்த நிலையில் காணப்பட்ட வடிகாலின் மேல்பகுதியில் மூடி அமைத்து சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. இப்பணியில் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் என மொத்தம் 30 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் காலை 6 மணி முதல், பகல் 11 மணி வரையிலும், மீண்டும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பணிகள் நடைபெறுகிறது. குப்பைகளை அள்ளிச்செல்ல டிராக்டர், மினி டிப்பர் லாரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜே.சி.பி இயந்திரம் உதவியோடு, வடிகால் தூர் வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அதிரை பேரூந்து நிலையத்தின் அருகே திறந்த நிலையில் காணப்பட்ட கழிவு நீர் வடிகாலை சீரமைத்து, அதன் மேல்பகுதி மீது மூடி அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல். ரமேஷ் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் பணிகளை கவனித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலக வட்டாரத்தில் கூறியது;
'அதிராம்பட்டினம் பகுதியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கழிவு நீர் சீராக வெளியேறுவதில் தடை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக வடிகாலை தூய்மைப் படுத்தும் பணிகளில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டையும், வடிகாலில் கழிவுகளை கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், வடிகால் சுத்தம் செய்யும் பணிகள், பிறப்பு~இறப்பு சான்றிதழ் வழங்கும் பணிகள் ஆகியவை துரிதமாக நடைபெற்று வருகிறது' என்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகளிலும் தூய்மைப் பணிகளில் துப்பரவுப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரம் தேங்கிக் காணப்படும் குப்பை கூளங்கள் அகற்றுவது, கழிவு நீர் வடிகாலில் பிளாஸ்டிக் அடைப்புகளை சீர்செய்வது, திறந்த நிலையில் காணப்பட்ட வடிகாலின் மேல்பகுதியில் மூடி அமைத்து சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. இப்பணியில் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் என மொத்தம் 30 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் காலை 6 மணி முதல், பகல் 11 மணி வரையிலும், மீண்டும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பணிகள் நடைபெறுகிறது. குப்பைகளை அள்ளிச்செல்ல டிராக்டர், மினி டிப்பர் லாரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜே.சி.பி இயந்திரம் உதவியோடு, வடிகால் தூர் வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அதிரை பேரூந்து நிலையத்தின் அருகே திறந்த நிலையில் காணப்பட்ட கழிவு நீர் வடிகாலை சீரமைத்து, அதன் மேல்பகுதி மீது மூடி அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல். ரமேஷ் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் பணிகளை கவனித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலக வட்டாரத்தில் கூறியது;
'அதிராம்பட்டினம் பகுதியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கழிவு நீர் சீராக வெளியேறுவதில் தடை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக வடிகாலை தூய்மைப் படுத்தும் பணிகளில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டையும், வடிகாலில் கழிவுகளை கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், வடிகால் சுத்தம் செய்யும் பணிகள், பிறப்பு~இறப்பு சான்றிதழ் வழங்கும் பணிகள் ஆகியவை துரிதமாக நடைபெற்று வருகிறது' என்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)