.

Pages

Monday, July 30, 2018

காட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அமைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பள்ளித்தெரு அருகே நீண்டகாலமாக பழுதடைந்து காணப்படும் சிறு பாலத்தின் அருகே தற்காலிக பாலத்தை அப்பகுதியினர் இன்று திங்கட்கிழமை அமைத்தனர். மேலும், இதன் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தூர் வாரப்பட்டது.

இதுகுறித்து பணிகளை எடுத்துச்செய்யும் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப் கூறியது:
தினந்தோறும் இந்த பாலம் வழியே இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வந்தநிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த பாலத்தின் நடுவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களால் கார்கள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, இப்பகுதியின் இறந்தவர்கள் (ஜனாஸா) உடல் இந்த வழியே கொண்டு செல்ல முடியாமல், தொலை தூர மாற்று வழியில் எடுத்து செல்கின்றனர்.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியினரின் தீவிர முயற்சியில் பொதுமக்கள் கடந்து செல்வதற்காக தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம், ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக பாலம் அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.