.

Pages

Sunday, July 22, 2018

டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர்  சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலன் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் விவசாய பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று (22.07.2018) தண்ணீர் திறந்து விட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கமலகண்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இல.நிர்மல்ராஜ், நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.இராசாமணி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டெல்டா பாசனத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.07.2018 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.  இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை பாசனத்திற்காக கல்லணையிலிருந்து காவிரியாற்றில் 7000 கனஅடியும், வெண்ணாற்றில் 7000 கன அடியும், கல்லணை கால்வாயில் 1000 கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் 2000 கன அடியும் மொத்தம் 17,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  காவிரி பாசனப் பகுதிகளில் தண்ணீர் கடைமடை சென்றடைந்த பின் காரைக்கால் பாசனப்பகுதிக்குரிய உரிய நீர் பங்கீடு செய்து அளிக்கப்படும். மேலும், கல்லணை கால்வாயில் படிப்படியாக தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டு ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். திறந்து விடப்பட்ட தண்ணீரை கொண்டு தஞ்சாவ10ர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி பயிர் செய்ய தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவைக்கு 0.35 இலட்சம் ஹெக்டேரிலும், சம்பாவிற்கு 1.05 இலட்சம் ஹெக்டேரிலும்,  தாளடிக்கு 0.30 இலட்சம் ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில்  குறுவைக்கு 0.27 இலட்சம் ஹெக்டேரிலும், சம்பாவிற்கு 1.20 இலட்சம் ஹெக்டேரிலும்,  தாளடிக்கு 0.23 இலட்சம் ஹெக்டேரிலும், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் குறுவைக்கு 0.35 இலட்சம் ஹெக்டேரிலும், சம்பாவிற்கு 1.31 இலட்சம் ஹெக்டேரிலும்,  தாளடிக்கு 0.30 இலட்சம் ஹெக்டேரிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பாவிற்கு 0.11 இலட்சம் ஹெக்டேரிலும், கடலூர் மாவட்டத்தில்  சம்பாவிற்கு 0.24 இலட்சம் ஹெக்டேரிலும் பயிர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் துறையினரின் ஆலோசனை யின்படியும், பொதுப்பணித்துறையினரிடம் ஒத்துழைத்தும், கல்லணையிலிருந்து வழங்கப்படும் நீரினை பயன்படுத்தும் அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மருதராஜா, அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ் (பூம்புகார்), பாரதி (சீர்காழி), இராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), இராமஜெய லிங்கம் (ஜெயங்கொண்டம்), சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந் தராஜ் (பேராவூரணி), இராமச்சந்திரன் (குன்னம்), ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை), தமிழ்செல்வன் (பெரம்பலூர்), பரமேஷ்வரி (மனச்சநல்லூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் மதியழகன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (திருச்சி) செந்தில்குமார், சிறப்பு தலைமை பொறியாளர் (தஞ்சாவூர்) (பொ) ரவிச்சந்திரன், தலைமை பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் (காவிரிகோட்டம்) முகமது இக்பால் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் பெருமக்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.