தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இந்திய விமானப்படைக்கு மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கான ஆள் தேர்வு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (23.07.2018) நேரில் பார்வையிட்டார்.
முதற்கட்டமாக இன்று தஞ்சாவூர், அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவள்ளுவர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1712 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் உடற்தகுதி தேர்வில் 941 இளைஞர்களும் அதில் 541 இளைஞர்கள் எழுத்துத்தேர்விற்கு தகுதி பெற்றனர். இன்றைய முடிவில் 14 இளைஞர்கள் நாளை நடைபெறும் உளவியல் தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு தேர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று நேரில் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வருகின்ற 26ம் தேதி கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியகுமாரி, மதுரை, நாமக்கல், இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு விமானப்படைக்கு ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில்கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 12ம் வகுப்பு தேர்வில் இயற்பியல், உயிரியல், வேதியியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச உயரம் 152.5 செமீ. உடற்தகுதி 6 நிமிடங்கள் 30 வினாடிக்குள் 1.6 கிலோ மீட்டர் தூரம் கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 10 முறை Push ups செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 10 முறை Sit ups செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 20 முறை Squats செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆகிய உடற் தகுதியுடன் தேர்வு பெறுபவர்கள் 45 நிமிடம் நடைபெறும் எழுத்து தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.
இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், டெல்லி குரூப் காமெண்டர் ஸ்ரீவர்ஸன், விங் காமெண்டர் சைலேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, வட்டாட்சியர் அருணகிரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
முதற்கட்டமாக இன்று தஞ்சாவூர், அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவள்ளுவர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1712 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் உடற்தகுதி தேர்வில் 941 இளைஞர்களும் அதில் 541 இளைஞர்கள் எழுத்துத்தேர்விற்கு தகுதி பெற்றனர். இன்றைய முடிவில் 14 இளைஞர்கள் நாளை நடைபெறும் உளவியல் தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு தேர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று நேரில் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வருகின்ற 26ம் தேதி கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியகுமாரி, மதுரை, நாமக்கல், இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு விமானப்படைக்கு ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில்கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 12ம் வகுப்பு தேர்வில் இயற்பியல், உயிரியல், வேதியியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச உயரம் 152.5 செமீ. உடற்தகுதி 6 நிமிடங்கள் 30 வினாடிக்குள் 1.6 கிலோ மீட்டர் தூரம் கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 10 முறை Push ups செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 10 முறை Sit ups செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 20 முறை Squats செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆகிய உடற் தகுதியுடன் தேர்வு பெறுபவர்கள் 45 நிமிடம் நடைபெறும் எழுத்து தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.
இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், டெல்லி குரூப் காமெண்டர் ஸ்ரீவர்ஸன், விங் காமெண்டர் சைலேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, வட்டாட்சியர் அருணகிரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.