அதிராம்பட்டினம், ஜூலை 30
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி மாணவர்களின் வசதிக்காக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சிற்றுந்து சேவை இன்று (30-07-2018) திங்கட்கிழமை காலை தொடங்கப்பட்டது.
பேருந்துச் சேவையை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் ஹாஜி ஏ.ஜெ அபுல் ஹசன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, உதவித் தலைமை ஆசிரியர் நாகராஜன், ஆசிரியர்கள் வேணுகோபால், உமர் பாருக், நீலகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சேவை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிக்கு உட்பட்ட சுமார் 8 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, குறைந்த கட்டணத்தில், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினமும் காலை 8 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் பேருந்து சேவை இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி மாணவர்களின் வசதிக்காக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சிற்றுந்து சேவை இன்று (30-07-2018) திங்கட்கிழமை காலை தொடங்கப்பட்டது.
பேருந்துச் சேவையை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் ஹாஜி ஏ.ஜெ அபுல் ஹசன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, உதவித் தலைமை ஆசிரியர் நாகராஜன், ஆசிரியர்கள் வேணுகோபால், உமர் பாருக், நீலகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சேவை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிக்கு உட்பட்ட சுமார் 8 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, குறைந்த கட்டணத்தில், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினமும் காலை 8 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் பேருந்து சேவை இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.