.

Pages

Sunday, July 15, 2018

ஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அஜ்வா பேரித்தம் பழம், ஜம் ஜம் நீர் வழங்கி உற்சாக வரவேற்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 15
ஹஜ் செய்திகள்: புனித ஹஜ் பயணிகளின் இந்திய உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானங்கள் வரத் துவங்கியது. ஜித்தா விமான நிலையத்தில் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அஜ்வா பேரித்தம் பழம், ஜம் ஜம் நீர் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடப்பு (2018) ஆண்டின் புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களை சுமந்து வரும் விமானங்கள் நேற்று முதல் வந்திறங்கத் துவங்கின. முதலாவது விமானம் பங்களாதேஷிலிருந்து ஜித்தா விமான நிலையம் வந்தது அதேவேளை மதினா விமான நிலையத்தில் இந்திய, பாகிஸ்தானிலிருந்தும் விமானங்கள் வந்திறங்கின. புனித யாத்ரீகர்களுக்கு அஜ்வா பேரீத்தம் பழம், ஜம் ஜம் நீர் மற்றும் மதினாவின் ரோஜா பூக்கள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

ஜூலை 14 துல் காயிதா 1 ஒன்றாம் தேதியாகிய நேற்று பிமான் பங்களாதேஷ் விமானம் ஜித்தா விமான நிலையத்தின் ஹஜ் டெர்மினலுக்கு முதலாவது ஹஜ் விமானமாக வந்திறங்கியது. அதேவேளை டெல்லியிலிருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானமும், கராச்சியிலிருந்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானமும் மதினாவில் வந்திறங்கின. நேற்று மட்டும் உலகெங்கும் இருந்து சுமார் 30 விமானங்கள் ஹஜ் யாத்ரீகர்களை சுமந்து வந்தன.

டெல்லியிலிருந்து நேற்றை பகல் 1.56 மணிக்கு முதலாவதாக மதினா வந்த 410 இந்தியப் ஹஜ் பயணிகளை இந்தியத் தூதர் அஹமது ஜவேத், கவுன்சலர் முஹமது நூர் ரஹ்மான் ஷேக், துணை கவுன்ஸலரும் ஹஜ்ஜூக்கான தனி சிறப்பு கவுன்ஸலருமான முஹமது ஷஹீத் ஆலம் ஆகியோர் வரவேற்றனர்.

நடப்பு வருடம் ஹஜ்ஜூக்காக 6,072 விமானச் சேவைகள் நடைபெறவுள்ளன. இதில் 3,383 விமானங்கள் ஜித்தாவிலும், 2,689 விமானங்கள் மதினாவிலும் வந்திறங்கவுள்ளன. இந்த வருடக் கடும் வெயிலை சமாளிக்க உதவும் வகையில் இந்திய கொடியின் வண்ணத்தில் தயாரான குடைகள் 'இந்தியா' என அதில் பெயர் பொறிக்கப்பட்டு யாத்ரீகர்களுக்கு இந்திய ஹஜ் மிஷன் சார்பாக வழங்கப்படவுள்ளன.

சென்னையிலிருந்து ஜித்தா வரும் விமானங்கள் எதிர்வரும் ஜூலை 29 ஆம் தேதி முதல் இயங்கும் எனவும் இதின் முதலாவது குழு ஏர் இந்தியா விமானத்தில் 420 ஹஜ் யாத்ரீகர்கள் பயணிக்கவுள்ளதாக கவுன்ஸலர் ஷேக் கூறினார்.

இந்தியாவிலிருந்து 234 விமானங்கள் மூலம் சுமார் 67,302 ஹஜ் பயணிகள் மதினாவிலும், 209 விமானச் சேவைகள் மூலம் 61,400 ஜித்தாவிலும் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஹஜ் மிஷன் தெரிவித்துள்ளது.

முதன்முதலாக, மலேஷியாவின் கோலாலம்பூர் மற்றும் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா சியோகர்னொ-ஹத்தா சர்வதேச விமான நிலையங்களிலிருந்து வருகை தரும் ஹஜ் யாத்ரீகர்கள் மட்டும் சவுதியின் குடிநுழைவு இமிக்கிரேசன் பணிகளை அங்கேயே ‘Makkah Road Service’ என்று பெயரிடப்பட்டுள்ள ஆன்லைன் சிஸ்டம் வழியாக செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த முன்னேற்பாடுகள் சவுதி அரேபியா, மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இடையே செய்து கொள்ளப்பட்ட The Proof of Concept (POC) System for pre-clearance at the point of departure to Saudi Arabia is being implemented in coordination with the Saudi, Malaysian and Indonesian authorities  என்ற பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெறவுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.