தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் முதல் காலாண்டிற்கான உணவு பாதுகாப்புத்துறையின் செயல் அறிக்கை குறித்த குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (31.07.2018) நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்ததாவது:
உணவு பாதுகாப்பு செயல் அறிக்கை கூட்டத்திற்கு வந்திருக்கும் அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பதை ஒரு கொள்கையாக எடுத்துக்கொண்டு செய்து காட்ட வேண்டும். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தங்கள் நிறுவனங்களில் வைப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பை வழங்காமல் துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதை போல் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேநீர் கடைகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள குப்பை தொட்டிகள் பயன்படுத்த வேண்டும். நுகர்வோரின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். குறிப்பாக மருந்து கடைகள், பெரிய துணிக் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களை அழைத்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை துணிப்பை பயன்படுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும். வணிகர்கள் மட்டும் இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாற்று, பொது மக்களும் தாங்கள் கடைக்கு செல்லும் பொழுது பொருட்களை எடுத்துவருவதற்கு ஏதுவாக துணிப்பைகளை அல்லது பாத்திரங்களையோ எடுத்துச்செல்ல வேண்டும்.
உணவு கூடங்கள், தேநீர் கடைகள் மற்றும் இதர உணவு வணிகர்கள், அம்மா உணவகம், சத்துணவு கூடங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், ஆடு வதை கூடங்கள், நியாய விலை கடைகள் மற்றும் கிடங்கு, அரசு மதுபான கடைகள், கோவில்களில் நடைபெறும் அன்னதானங்கள் ஆகியற்றிற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் வழங்கப்படும் உரிமை சான்றிதழ்கள் பெற்று உரிய காலத்தில் அதனை புதுப்பித்தும் நடத்திட வேண்டும். உரிமம் இல்லாமல் நடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கே.சி.அருண், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஹோட்டல் சங்க உறுப்பினர்கள், வணிக சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்ததாவது:
உணவு பாதுகாப்பு செயல் அறிக்கை கூட்டத்திற்கு வந்திருக்கும் அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பதை ஒரு கொள்கையாக எடுத்துக்கொண்டு செய்து காட்ட வேண்டும். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தங்கள் நிறுவனங்களில் வைப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பை வழங்காமல் துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதை போல் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேநீர் கடைகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள குப்பை தொட்டிகள் பயன்படுத்த வேண்டும். நுகர்வோரின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். குறிப்பாக மருந்து கடைகள், பெரிய துணிக் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களை அழைத்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை துணிப்பை பயன்படுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும். வணிகர்கள் மட்டும் இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாற்று, பொது மக்களும் தாங்கள் கடைக்கு செல்லும் பொழுது பொருட்களை எடுத்துவருவதற்கு ஏதுவாக துணிப்பைகளை அல்லது பாத்திரங்களையோ எடுத்துச்செல்ல வேண்டும்.
உணவு கூடங்கள், தேநீர் கடைகள் மற்றும் இதர உணவு வணிகர்கள், அம்மா உணவகம், சத்துணவு கூடங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், ஆடு வதை கூடங்கள், நியாய விலை கடைகள் மற்றும் கிடங்கு, அரசு மதுபான கடைகள், கோவில்களில் நடைபெறும் அன்னதானங்கள் ஆகியற்றிற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் வழங்கப்படும் உரிமை சான்றிதழ்கள் பெற்று உரிய காலத்தில் அதனை புதுப்பித்தும் நடத்திட வேண்டும். உரிமம் இல்லாமல் நடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கே.சி.அருண், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஹோட்டல் சங்க உறுப்பினர்கள், வணிக சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.