அதிராம்பட்டினம், ஜூலை 18
அதிராம்பட்டினம் ஹாஜா நகரைச் சேர்ந்த பைசூல்தீன் மனைவி தமீம்பானு (43). அண்மையில் இவர் நடைப்பயிற்சிக்காக காலை 6 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். 1 மணி நேரத்துக்கு பிறகு நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்ததாம். வீட்டினுள் சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் அலமாரியை உடைத்து, அதிலிருந்த ஒன்பதே முக்கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தமீம்பானு திங்கள்கிழமை (ஜூலை 16) அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
அதிராம்பட்டினம் ஹாஜா நகரைச் சேர்ந்த பைசூல்தீன் மனைவி தமீம்பானு (43). அண்மையில் இவர் நடைப்பயிற்சிக்காக காலை 6 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். 1 மணி நேரத்துக்கு பிறகு நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்ததாம். வீட்டினுள் சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் அலமாரியை உடைத்து, அதிலிருந்த ஒன்பதே முக்கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தமீம்பானு திங்கள்கிழமை (ஜூலை 16) அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.